 |
|
 |
|
 |
|
|
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள் |
நன்றி - இராமகிருஷ்ணா மடம் (வெளியீடு)
பகவான் ராமகிருஷ்ணர் நம் நாட்டில் பிறந்த பல்லாயிரக்கணக்கான மகான்களில் ஒருவர். மிக சமீப காலத்தில் தோன்றிய ஒரு பெரிய மகான்... சுவாமி விவேகானந்தரை ஆன்மீகப் பாதையில் செலுத்திய குரு... அவர் தம் மொழிகளைக் கேட்டலும் படித்தலும் நம் மனத்திற்கு அமைதியையும், தெளிவையும் வழங்கும் என்பதில் ஐயமே இல்லை.
1. ஆகாயத்தில் மேகங்கள் தோன்றிச் சூரியனை மறைக்குமானால் அதன் பிரகாசமும் மறைந்து போகும். அது போல மனத்தில் அகங்காரம் இருக்கும் வரையில் அதில் ஈசுவர ஜோதி பிரகாசிக்காது.
2. அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கை கூடாது. பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்.
3. மழைத் தண்ணீர் மேட்டு நிலத்தில் தங்கி நிற்பதில்லை. பள்ளமான இடத்துக்கு ஒடி வந்து விடுகிறது. அது போல் இறையருள், தற்பெருமையும், கர்வமும் உள்ளவர்களுடைய உள்ளத்தில் தங்கி நிற்பதில்லை; பணிவுள்ளவர்களின் உள்ளத்தில் தான் தங்கி நிற்கும்.
4. "என் செயலாவது யாதென்று மில்லை" என்றும் கொள்கை மனத்தில் உறுதியாக நிலைக்குமானால், மனிதனுக்கு இந்தப் பிறவியிலேயே முக்தி உண்டாகும். அதன் பிறகு அவனுக்கு வேறொரு பயமுமில்லை.
5. இனிப்புத் தின்பண்டங்களால் ஏற்படும் தீங்கு கற்கண்டால் விளைவதில்லை. அது போல்
|
|
 |
|