சைவத் தமிழ்ச் சங்கம்

அருள்மிகு சிவன் கோவில்

Search
Close this search box.

மகா சிவராத்திரி விரதம் – 08.03.2024 வெள்ளிக்கிழமை

மகா சிவராத்திரி விரதம் – 08.03.2024 வெள்ளிக்கிழமை

தேடிக் கண்டு கொண்டேன்-திரு

மாலோடு நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை யென்னுள்ளே

தேடிக் கண்டு கொண்டேன்

                                                                       (அப்பர் சுவாமிகள்)

சிவனடியார்களே!

சைவசித்தாந்தம் கூறுகின்ற மும்மலங்களில் மூலமலமாகத் திகழும் ஆணவமலம் தேவாதி தேவர்களையும் பீடித்திருந்தது உண்மையே. இதனை மையமாகக் கொண்டு நான்(பிரம்மா) பெரிது, இல்லை நான் தான் (விஷ்ணு) பெரிது என இருவரும் அகங்காரம் கொண்டு பிரம்மா அன்னப் பறவையாகவும், விஷ்ணு பன்றியாகவும் ஒளிப்பிழம்பின் (சிவபெருமானின அடி முடி தேடிச் சென்றபோது இறைவன் சோதி வடிவமாகக் காட்சி கொடுத்த தினமே மகாசிவராத்திரி
தினமாகும். நிகழும் சோபகிருது வருடம் திருவள்ளுவர் ஆண்டு 2055 மாசித் திங்கள் 25ம் நாள் (08.03.2024) வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி தினமாகிய அன்று மாலை 17.30 மணிமுதல் மறுநாள் காலை 07.00 மணி வரை விசேட பூசை வழிபாடுகளும், இலிங்கநாதப் பரமேச்சுரப் பெருமானுக்கு நான்கு சாம அபிசேகமும் பூசையும் இடம்பெறவுள்ளது.

 

வழிபாட்டு நிரல்..

1ம் சாமப்பூசை 08.03.2024

வெள்ளிக்கிழமை மாலை 17.30 மணிக்கு ஸ்நபநாபிசேகம், இரவு 19.00 மணிக்கு முதலாம் சாமப் பூசையைத் தொடர்ந்து சந்திரசேகரப் பெருமான் திருவீதியுலா வருவார்.

2ம் சாமப்பூசை 08.03.2024

வெள்ளிக்கிழமை இரவு 22.45 மணிக்கு இலிங்கோற்பவ மூர்த்திக்கு உருத்ராபிசேகம், இரவு 23.45 மணிக்க மூலவர்

பூசையினைத் தொடர்ந்து நள்ளிரவு 12.00 மணிக்கு இலிங்கோற்பவ மூர்த்திக்கு விசேட பூசை

3ம் சாமப்பூசை 09.03.2024 சனிக்கிழமை

அதிகாலை 02:30 மணிக்கு அபிசேகம் அதிகாலை 03:00 மணிக்கு 3ம் சாமப் பூசை

4ம் சாமப்பூசை 09.03.2024 சனிக்கிழமை

காலை 05:30 மணிக்கு அபிசேகம்

காலை 06:00 மணிக்கு 4ம் சாமப் பூசை

பாறணைப்பூசை 09.03.2024

சனிக்கிழமை காலை 07.00 மணி

  • பூசைகளுக்கு இடையே கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

 

குறிப்பு:

01. இலிங்கோற்பவ காலத்தில் இலிங்கநாதபரமேச்சுரப் பெருமானுக்கு நடைபெறும் 1008 வில்வார்ச்சனையில் அடியார்கள் சங்கற்பித்து அர்ச்சனையில் கலந்துகொள்ளலாம்.

02. சிவராத்திரி தினத்தன்று அடியார்கள் பிரதோசலிங்கப் பெருமானுக்கு தங்கள் கைகளால் பாலாபிசேகம் செய்யலாம். அபிசேகங்களுக்குத் தேவையான பொருட்களை முற்கூட்டியே ஆலயத்தில் சேர்ப்பிக்கலாம் –

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”

🌐 மொழியை மாற்ற »